11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 1 மே, 2022

பண்டாரநாயக்கா குடும்பத்தின் தமிழின படுகொலைகள்.

சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சோ்ந்த சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா தன் கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை மறைப்பதற்காக 1950 ஆம் ஆண்டின்  நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளை உருவாக்கி தன் சிங்கள மொழி வெறியனாக அடையாளப்படுத்தினாா்  . 1951ஆம் ஆண்டு இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக கத்தோலிக்க மதத்திற்கு என்று தனித்துவமான இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 ஆம்ஆண்டு பிரதமராகிய சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கி சிங்கள கோட்பாடுகளை  நடைமுறை படுத்தி சிங்கள மொழி வெறியனாக அடையாளப்படுத்தி தனது கத்தோலி்க மதத்தின் அடையாளங்களை மறைத்துக் கொண்டாா்.

 சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று இருந்தது நீங்கள் அறிந்த விடையம்.

பிரதமர்  சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஒரு செவ்வாய்க்கிழமை. அன்று காலையில்   தமது ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில்  வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த சோமராம  தேரரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  1959ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று அவரது மரணம் வைத்தியசாலையிலேயே நிகழ்ந்தது. பிரதமர்  சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின்மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.


திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா.

சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டதை  தொடா்ந்து அவரது மனைவி திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 21ஆம் திகதி ஆவணி மாதம் 1960 ஆம் ஆண்டு   முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். 

 1965   ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980  ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு  திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்காவின்  அரசிற்கு எதிராக இந்து பெளத்த சிங்கள மக்களை புரட்சி செய்ய தூண்டி அவா்களை கொலை செய்து அழிக்க வேண்டும் என்பதற்காக கத்தோலிக்க மதம்  கத்தோலிக்க மதத்தை  சோ்ந்த  பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera,) என்ற  சிங்களவரை தலைவராக கொண்டு  ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினாா்கள்.

1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல  40000 த்திற்கும் மேற்பட்ட   பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள். திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா நடாத்தி முடித்த முதலாவது இந்து பெளத்த சிங்கள மக்கள் படுகொலையாகும்.

திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்காவின் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் தனது கணவா்  சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்ற கோட்பாடுகளாகவே இருந்தது என்பதனை நீங்கள் வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க .

இலங்கையின் முன்னால் பிரதமா்களான  திரு+திருமதி சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆகும் . 

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க  தனது தந்தை சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா போன்றும் தனது தாயாா் திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா போன்றும் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்ற கோட்பாடுகளாகவே இருந்தது என்பதனை நீங்கள் வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.