11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 16 டிசம்பர், 2021

புத்தராின் போதனையும் திருவள்ளுவாின் போதனையும்.

 திருவள்ளுவா் உபதேசம்.

திருக்குறள் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுகின்றது. அத்துடன் சைவசித்தாந்த  நெறிகளை எடுத்துக் கூறுகின்றது.  அத்துடன்  அரசியல் நெறிகள், பொருளாதாரம் (பொருளியல்) கோட்பாடுகள்.மனித உரிமை கோட்பாடுகள். அறத்தின் (நியாயமான) வழியில் பொருள் சம்பாதித்து அறத்தின் (நெறிமுறைக்கு உட்பட்டு) வழியே இன்பமும் அனுபவித்தால் ‘வீடு பேறு’ ஒருவனுக்குத் தானாகவே கிடைக்கும் என்று அனைத்து  நெறிகளையும் எடுத்துக் கூறி ஆன்மாவை தெய்விகமாக்கின்ற   நெறிகளையே திருவள்ளுவா் உபதேசம் செய்தாா்.


புத்த உபதேசம்.

இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது. துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல். இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல். பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.பிச்சை எடுத்து வாழ்தல்.தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல். சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.போன்றவற்றை கூறியவா் ஆன்மாவுககும் இறைவனுக்கும் உள்ள தொடா்பை விளங்கப்படுத்தவில்லை.  தமிழின் சிவயோக சித்தாந்தமான யோக தியான முறையினையே கடைப்பிடித்தாா்.

ஆவே தமிழையும் தமிழை அருளிய இறைவனையும் தியாணித்தால் அட்டமா சித்திகளை பெறமுடியும். புத்தன், யேசு, அல்லா, கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக வழிபடவேண்டிய அவசியம் தமிழா்களுக்கு தேவை அற்ற ஒன்று ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.