11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

சங்க கால தமிழ் இலக்கியங்களில் இருந்து சிவனைப் புகழ்ந்து குறிப்பிடும் 50 மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன..

 1. "பிறவா யாக்கைப் பெரியோன்"

இந்திர விழவூரெடுத்த காதை:170-வது வரி


2. "செஞ்சடை வானவன் அருளின் விளங்க

வஞ்சித் தோன்றிய வானவன்"

-கால்கோள்காதை: 98-99


3. "நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி’’

-கால்கோள்காதை: 54-55


4. "தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்"

-கால்கோள்காதை: 64


5. "பெரியோன் தருக திருநுதல் ஆகஎன’’ 

-மனையறம் படுத்த காதை: 41


6. "திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப

உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய

இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்"

-கடலாடு காதை: 38-43


7. ‘‘திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,

பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,

செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,

செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்"

-நடுகற் காதை: 67-70


8. "ஓங்குயர் கூடல் ஊர்துயில் எடுப்ப

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்"

-ஊர்காண் காதை: 6-7


9. "அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்"

-புறஞ்சேரி இறுத்த காதை: 137


10. "ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி

மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்"

-வரந்தரு காதை: 141-142


11. "நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா

பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக"

-விழாவறை காதை: 54-55


12. "ஆலமர் செல்வன் மகன்

விழாக் கால்கோள் காண்மினோ"


-மலர்வனம் புக்க காதை: 144-145


முருகனுக்கு விழா எடுத்த நிகழ்வு பற்றி கூறுமிடத்து!


13. "இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று 

எட்டு வகையும் உயிரும்.."

- சமயக்கணக்கர் தம் திறம்கேட்ட காதை 89-90


ஈசனின் இயல்புகள் மிகத்தெளிவாக எடுத்தியம்பப்பெற்றுள்ளது!



14. "மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய

    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்

    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்.."

பரிபாடல் 5: 25-27


15. "எயில் எயப் பிறந்த எரிபோல"

கலித்தொகை 150: 05


16. "அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த

பெருந் தண் சண்பகம் போல.."

கலித்தொகை 150: 20-21


17. "தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி

    மணிமிடற் றண்ணல்.."

பரிபாடல் 9: 6-7


18. "ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்.."

கலித்தொகை 81: 09


19. "ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்.."

புறநானூறு 198: 09


20. "கடுந்தெறற் செந்தீ வேட்டுப்

    புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே"

புறநானூறு 251: 6-7


21. "ஆலமர் செல்வற்கு

அமர்ந்தனன் கொடுத்த.."

சிறுபாணாற்றுப்படை 97வது வரி.


22. "நீலமேனி வாலிழை பாகத்து 

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.."

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து- 1


23. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்.."


புறநானூறு 1: 7-8


24. "...வெள்ளேறு

வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் 

மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்.."


-திருமுருகாற்றுப்படை 151-154


25. "புங்கவம் ஊர்வோனும்.."

பரிபாடல் 8:02


26. "ஆதிரை முதல்வனின் கிளந்த

நாதர் பன்னொருவரும்"

பரிபாடல் 8:06


27. "ஆறு அறி அந்தணற்கு அருமறை பல பகர்ந்து.."


கலித்தொகை கடவுள் வாழ்த்து-1


28. "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை
எடுக்கை செல்லாது உழப்பவன் போல.."
கலித்தொகை 38: 1-5
29. "ஆன் ஏற்றுக் கொடியோன்"
கலித்தொகை 26:05

30. "சீறு அருமுன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇ"
#கலித்தொகை 101:08

31. "படரணி யந்திப் பசுங்கட் கடவுள்
இடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்
குடர்கூளிக் கார்த்துவான்"       கலித்தொகை 101:21 - 26

 32. "கொலைவன் சூடிய குழவித் திங்கள்"

#கலித்தொகை 103: 15

33. "எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறை"
கலித்தொகை 103: 25

34. "மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
        முக்கண்ணான் உருவே போல்"   கலித்தொகை 104: 11-12

35. "பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல"
கலித்தொகை 105: 13

36. "...மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றையான்"

கலித்தொகை 142: 27-28

37. "பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்"
கலித்தொகை 150:09

38. "உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
       உரு.."
கலித்தொகை 150:13

39 . "புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, பின்         
       கதுப்பு"
கலித்தொகை 150:17

40. "எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை.."
அகநானூறு கடவுள் வாழ்த்து-1


41. "பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே"
புறநானூறு 6: 17-18

42. "ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று
அருங் கணிச்சி மணி மிடற்றோனும்"
புறநானூறு 56: 1-2

43. "பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே"         புறநானூறு 91: 5-7

44. "நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்றுபுரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்"
புறநானூறு 166: 1-9

45. "ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல"

புறநானூறு 55:05

46. "ஊர்தி வால்வெள் ளேறே"

புறநானூறு கடவுள் வாழ்த்து-1

47. "தென்னவன் பெயரிய துன்னரும் துப்பின் 
தொன்முது கடவுள் பின்னர் மேய 
வரைத்தாழ் அருவிப் பொருப்பின் பொருந" 
#மதுரைக்காஞ்சி : 40-42

48. "நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரியுண்டிக் கடவுள தியற்கையும்"
#மலைபடுகடாம் 81:84

49. "மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு"
#முத்தொள்ளாயிரம் கடவுள்வாழ்த்து

50. "ஆல்கெழு கடவுள்"
திருமுருகாற்றுப்படை 256


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.