11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 2 நவம்பர், 2021

கைக் கூலிகள்

 தமிழின அழிப்புகள் செய்கின்ற கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகளே பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF),  உலகத் தமிழர் பேரவை (GTF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) .

பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியன பிரித்தானிய அரசியல்வாதிகளுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டவை, பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் உள்முரண்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி ஆகியவற்றுடனனான தொடர்புகளும் அவர்களின் நலன்களுமே இந்த அமைப்புக்களின் அடிப்படையான நலன்கள். இக்கட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சலுகைகள், வர்த்தகத் தொடர்புகள் போன்றவையே இந்த இரு அமைப்புக்களின் அரசியலையும் நிர்ணையிக்கின்றன. தமிழப் பேசும் மக்களின் நலன்கள் அல்ல.

உலகத் தமிழர் பேரவையும் அவர்களின் வர்த்த நலன்களும் தன்னார்வ நிறுவனங்கள் பாணியிலான பேச்சுவார்த்தை அரசியலைச் சார்ந்தும் அதன் ஆதாரமாக தொழிற்கட்சியும் செயற்படுகிறது. பேச்சுவார்த்தையை மட்டுமே அரசியலாகக் கொண்ட அதிகார வர்க்க அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த அமைப்பு  BTF  இலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிற்கட்சி ஆதரவாளர்களையும் உள்வாங்கிக்கொண்டுள்ளது.

இதன் மறுபக்கத்தில் டேவிட் கமரனின் இலங்கைப் பயணத்தின் பின்னர் பி.ரி,எப் இல் தனது செல்வாக்கை பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் ஆதரவாளர்கள் வளர்த்துக்கொண்டனர். தமிழர் அரவசியலில் தலையிடுவதற்கு மிக நீண்ட காலங்களின் முன்பே கொன்சர்வேட்டீவ் (பழமைவாதக் கட்சியின்) உயர்மட்ட ஆலோசகரான கலாநிதி அர்ச்சுனா சிவானந்தம் போன்றோர் பிரிஎப் ஐ பழமைவாதக் கட்சியின் செல்வாக்கின் கீழ் கொண்டுவந்தனர்.


பிரித்தானிய வங்கியான Barclays இன் Director பதவி மற்றும் பிரஞ்சு வங்கியான Société Générale இன் Director பதவி ஆகியவற்றை வகிக்கும் பல பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆலோசகருமான அர்ச்சுனா சிவாநதன், பி.ரி.எப் இன் துணை அமைப்பான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பின் தலைவர். இலங்கை அரசிற்கும் அதேவேளை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கும் பண உதவி வழங்குவதாகக் கருதப்படும் லைக்கா நிறுவனத்திற்கு எதிராக புலம் பெயர் அமைப்புக்கள் எப்படுக் குரல்கொடுக்கலாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.