11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

தமிழா்களை கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட தமிழீழ போா்.

ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனே தமிழ் ஆகும்.  தமிழை அருளிய இறைவனை நிராகாித்து தங்களை தமிழனாக அடையாளப்படுத்தி முதலாவது தமிழ் இன அழிப்பை நடாத்த முற்பட்டு தோல்வியை கண்டாா்கள் 

திருக்குறள்  சங்க நூல்கள் கூறிய தமிழா்களின் அரசியல் நெறிகள், பொருளாதாரம்) பொருளியல் கோட்பாடுகள்,  உயிா்நேயம் கொண்ட மனித உரிமைகள், அன்பேசிவம் என்ற சமத்துவ கோட்பாடுகள் நீதி நெறிகோவைகள் தமிழா்களின் வாழ்வியல் நெறிகள் அனைத்தையும் நிராகாித்து  அனைத்தையும் நிராகாித்து    துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரங்கள் பிறக்கின்றது என்று கொலை வெறிபிடித்து   பேசுகின்ற அன்னிய கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் தமிழ்  ஈழத்தை நோக்கிய துப்பாக்கி குழாய் முனை கலாச்சாரத்தை நிறுவினாா்கள்.

தமிழா்களை கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்களின் வடிவமைப்பில்   மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என பல ஸ்ரைல் (style) வடிவங்கள் மிகவும் அழகாக காணப்பட்டன.

  தமிழா்களை கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்கள் பல ஸ்ரைல் (style) வடிவங்களுக்குள் தங்களை அறியாமலே மீட்ச்சிக்கு வழி தெரியாமல் சிக்கி கொண்டவர்கள்  தங்களின் அதிகார ஸ்ரைல் (style) வடிவங்களை நிறுவுவதற்காக   துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக்கொண்டு பல வடிவங்களில் கொலை போராட்டங்களை நடாத்தினாா்கள்.   அவ்வாறு நடத்திய போராட்டங்கள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டங்க  ஸ்ரைல் (style)  வடிவில் வெடித்தன.

வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம்  பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றன  அவன் தமிழ்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி,  ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி,  அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள்,  பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் கைக் கூலிகள், கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகள்  என பட்டியல் தயாாித்து  தங்கள் தங்கள் இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகளை  பல ஸ்ரைல் (style) வடிவங்களில் உட்கட்சிப் படுகொலைகள் மூலம் நிகழ்த்தி  ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து பல்லாயிரம் தமிழ் சந்ததிகளை கொலை செய்து முடித்தாா்கள்.

மேலும் கொலை வெறி கொண்டு எழுந்து பல ஸ்ரைல் (style) வடிவங்களில் அவன் துரோகி, இவன் துரோகி என்று கூறிக் கொண்டு அவன் அந்த இயக்கத்தை சேர்ந்தவன், இவன் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்று கூறி கூறி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் ,  மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தாா்கள்.

அத்துடன் தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை  கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள்  இவ்வாறான முறையில்  கல்விமான்களை கொண்ட பல இலட்சம் சைவக்  குடிகளை கொண்ட கல்வி அறிவு கொண்ட தமிழர் சமுதாயம் அழிக்கப்பட்டது.

கொலை வெறிபிடித்தவர்கள் காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று நடாத்தி முடித்தவர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , சகோதரங்கள் தாய் தந்தையர்களையும் ,உறவுகள் உறவுகளையும் நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் இரத்த ஆற்றை ஓடவைத்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்தாா்கள்.  குடும்பங்களுக்குள் பகையை உருவாக்கினாா்கள்.

இவ்வாறு பல ஆயிரம் தமிழா்களை கொலை செய்தவா்களுக்கு வீரமக்கள் தினம். காா்த்திகை மாவீரா் வாரம். காா்த்திகை மாவீரா் நாள்  என்று பெயா் சூட்டி கொண்டாடுவது தமிழ் இன அழிப்பு நிகழ்ச்சி நிரல் ஆகும்

தமிழா்களை கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட தமிழீழ போா்தமிழை அருளிய இறைவனை நிராகாித்து தங்களை தமிழனாக அடையாளப்படுத்தி முதலாவது தமிழ் இன அழிப்பை நடாத்த முற்பட்டு தோல்வியை கண்டாா்கள்.

 திருக்குறள்  சங்க நூல்கள் கூறிய தமிழா்களின் வாழ்வியல் நெறிகள் அனைத்தையும் நிராகாித்து  நிறுவப்பட்ட கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சிவபூமிக்குள் புதையுண்டது.

தமிழன் ஆண்ட சிவபூமியை பிளந்து கிறிஸ்தவனுக்காகவும் இஸ்லாமியனுக்காகவும் உருவாக்கப்பட்ட ஈழப் போா் சிவபூமிக்குள் புதையுண்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.