11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 3 நவம்பர், 2021

தீபாவளி (Deepavali, Diwali) வாழ்த்துக்கள்.

                                            


அன்னை ஆதிபராசக்தியின் நவராத்திரி விழா வழிபாடானது புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்படுகின்ற விரதம் ஆகும்.

நவராத்திரி விழா வழிபாடானது முடிவுற்றவுடன் அன்னை ஆதிபராசக்தியாகிய பார்வதி தேவி சிவனை நினைந்து ஊசியின் முனையில் தவம் இருந்து வழிபட்டு அதன் வழிபாட்டு பலனாக கேதார கௌரி நோன்பு விரதத்தின் இறுதி நாளான இருபத்தொராம் நாள் அமாவாசையும் நரக சதுர்த்தசியும் கூடிய தினம் திருவண்ணாமலையில் ஈசான மூலையில் பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வராக தோற்றம்மாகி சிவசத்தியாக காட்சி கொடுத்த பெருவிழா திருநாளே தமிழா்கள் போற்றிய அம்மையப்பன் ஆகிய “தாய்-தந்தை” வடிவமாகிய தமிழா்களின் சிவசத்தி பெருவிழா திருநாள் ஆகும்.

பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வராக காட்சி கொடுத்த சிவசத்தி பெருவிழா திருநாள் அன்று சிவனடியார்களின் இல்லங்கள் தோறும் உமை உமையொருபாகன் சிவசத்தியாக எழுந்தருளி அருளாசி வழங்கிய மங்களகரமான திருநாளை தமிழர்கள் தங்களின் பெருவிழாவாக கருதி தங்களின் வீடுகள் தோறும் மங்களகரம் நிறைந்த நிறைகுடம் வைத்து தமிழா்களின் தொண்மையான அடையாளங்களை கொண்ட மங்களகர குத்துவிளக்கில் தீபங்களை ஏற்றி சிவ வழிபாட்டு பெருவிழா திருநாளாக  கொண்டாடுகின்றாா்கள்.

சிவசத்தி பெருவிழாவானது கிருட்டிணனின் அவதாரத்திற்கு முற்பட்ட தமிழா்களின் பெருவிழா ஆகும். தீபாவளி என்பதன் விளக்கம்—– தீப + ஆவளி = தீபாவளி இதில் ஆவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். ஆகவே ஆலயங்கள் வீடுகள் தோறும் மங்களகரம் நிறைந்த நிறைகுடம் வைத்து சிவசத்தி வழிபாடு செய்கின்ற புண்ணிய திருநாளாகும்.

திருமாலின் கிருட்டிண மகாபார முற்பட்டது பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வராக காட்சி கொடுத்த சிவசத்தி பெருவிழா திருநாள்.

நரகாசுரனை கொன்றது யாா்?

சிந்துவெளி நாகரீகத்திற்கும் முற்பட்ட சங்க காலத்தின் காடும், காடு சார்ந்த முல்லைத் திணையின் தமிழ் பண்பாட்டு கலச்சார அடிப்படையாக கொண்டு எழுந்த திணையின் மாயோன் மேய காடுறை உலகமும் என்று தமிழ் போற்றிய தமிழா்களின் தெய்வமான திருமாலின் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், பலராம அவதாரம், இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் ஆகியவற்றை கொண்டது ஆகும்.

கிருட்டிணரின் பிறப்பானது ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் அட்டமி திதி சேர்ந்த ரோகிணி நட்சத்திரத்தில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தாா்.

திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றாள்.

நரகாசுரன் தான் இறந்த நாள் அன்று மக்கள் துயாின்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தனது தாயான பூமாதேவியாகிய சத்தியபாமாவாவிடமும் தன் தந்தையாகிய திருமாலின் வராக அவதாரமாகிய கிருட்டிணனிடமும் வரமாக பெற்றுக் கொண்டு உயிரை துறந்தான்.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் நரக சதுர்த்தி நாளில் நரகாசுரன் என்ற அசுரனை கிருட்டிணா் வதம் செய்த நாளே நரகாசுரன் இறந்த நாள். திருமாலின் தசாவதாரமான கிருட்டிண அவதராத்திற்கு முன்பு பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வராக காட்சி கொடுத்த சிவசத்தி பெருவிழா திருநாள்ளாகும்.

இராமாயண இதிகாசத்தில் தீபாவளி .

மங்களகரம் நிறைந்த உமை உமையொருபாகனின் அர்த்தநாரீசுவர தோற்றமான திருநாளில்தான் தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட இராமர்- தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட இராவணனை அழித்து விட்டு பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வராக காட்சி கொடுத்த சிவசத்தி பெருவிழா திருநாள் வரை இலங்கையில் தங்கியிருந்து தனது வனவாசத்தையும் முடித்து விட்டு தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட தனது மனைவி சீதையுடனும் தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட தனது தம்பி இலட்சுமணனுடனும் தாயகம் திரும்பிய நாள். இராமன் தன்மனைவி தனது தம்பி இலட்சுமணனுடன் தாய் நாடு திரும்பினான்.

சீக்கியர்களின் பெருவிழாவான தீபாவளி.

சிவமும் சத்தியும் இரண்டற கலந்து ‘அர்த்தநாரீசுவரர்’ தோன்றிய பெருவிழா தினத்தில் 1577-இல் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். மேலும், சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோபிந்த், முகலாய மன்னர் ஜஹாங்கீரின் சிறைப்பிடியில் இருந்து தப்பிய நாள் இதுவாகும்.இதன் காரணமாகவும் சீக்கியர்களும் திபாவளி பண்டிகையை ’பண்தி சோர் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி.

இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் பிறந்தவரே மகாவீரர். இவரின் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

தமிழ் இலக்கியங்களில் அர்த்தநாரீசுவரர் பெருவிழா.

சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி + ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது. அதாவது சிவபெருமான் பார்வதி தேவியின் ஒன்றுபட்ட வடிவம் தான் அர்த்தநாரீசுவரர் தோற்றமாகும்.

உமையொரு பங்கன், மங்கையொரு பாகன், மாதொரு பாகன். என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார். சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கின்றது. இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர்.

அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. “பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்று புறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது. தேவார பதிகங்களிலும் “வேயுறு தோளி பங்கன்”, “வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்” எனப்படுவது உமையொரு பாகனேயேயாம்.

இந்தியாவில் பிறமொழி இனத்தவா்களாகிய இந்துக்களின் தீபாவளி.

இந்தியாவில் பிறமொழி இனத்தவர்களான இந்துக்கள் தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் பண்டிகையாகும்.

சிவகுற்றம்.

தமிழினதும் தமிழா்களினதும் “தாய்-தந்தை” வடிவமாகிய சிவமும் சத்தியும் இரண்டற கலந்து ‘அர்த்தநாரீசுவரர்’ தோன்றிய சிவசத்தி பெருவிழாவான தீபாவளி திருநாளை எதிா்ப்பதும், உமை உமையொருபாகனின் அர்த்தநாரீசுவரர்’ பெருவிழா வரலாற்றை திாிப்பது சிவகுற்றம்.

சைவக் குடிகளாகிய தமிழா்களே நீங்கள் சிவகுற்றம் செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே உங்களின் உடல் என்றுமே புனிதமடைய முடியாது. அத்துடன் உங்களின் இறந்த உடலின் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை நீங்கள் நினைவில் கொள்ளள் வேண்டும்.

வாழ்த்து.

மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும், வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசு நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும், உயிர்கள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும், சைவ நெறியில் சொல்லப்பட்ட அனைத்தும் தர்மங்கள் வளர வேண்டும். தன்னலமற்ற தமிழ் போற்றிய தெய்வீக வழிபாடுகள் பெருக வேண்டும், பெருமை மிக்க சைவ நெறிநீதி உலகமெல்லாம் பரவ வேண்டும். என்று அவனருளாளே உமைை உமையொரு பாகன் தாழ் பணிந்து வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்.

ஆக்கம் அ. அருள்செல்வன், உலக சைவ பேரவை, அருளகம், சிவபுரம்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.