11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 26 ஜனவரி, 2022

இலங்கை தமிழா்களை கொலை செய்தவா்கள் யாா்?

 கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக போராட கிளம்பிய அனைத்து இருபத்தியொரு இயக்கங்களும் தமிழின அழிப்பு செய்தவர்கள்.

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அனைத்து தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள் உட்கட்சிப் படுகொலைகள் மூலம்   ஆயிரக்கணக்கான தங்களின் அமைப்பை சோ்ந்த போராளிளை அதாவது உங்களின் சகோதரங்களை,  உங்களின் உறவினா்களை, உங்களின்  நண்பா்களை   பலவிதமான ஸ்ரைல் (style) கொலை செய்து தங்களால் கொலை செயயப்பட்டவா்களின் உடல்களை   பலவிதமான ஸ்ரைல் (style) அழித்தாா்கள்.அதாவது தமிழின அழிப்பு செய்தாா்கள்.  

காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி சொல்லி உங்களின் சகோதரங்களை உறவினா்களை நண்பா்களை படு கொலை . அதாவது தமிழின அழிப்பு செய்தாா்கள்.  

ஈழப்போராட்டம் நடாத்திய தமிழின அழிப்பாளர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , பிள்ளைகள் தாய் தந்தையர்களையும் , உறவுகள் , உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும்  தமிழ் மக்களை வகை தொகை இன்றி கொலை செய்து தமிழ் இன அழிப்பு செய்தாா்கள்.

ஈழப்போராட்டம் நடாத்திய தமிழின அழிப்பாளர்கள் கிறிஸ்தவ இஸ்ஸாமிய மத போதகர்களை தவிா்த்து சைவ ஆலய குருமாா்ககளை கொலை செய்தாா்கள்.

 மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , சிறந்த தொழில் அதிபர்கள் ,அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் ,  மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், கடின உழைப்பாளர்கள் ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் ,தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தவர்கள்.தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்ககளிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக் காதவர் களையும்  கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை  கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள்  இவ்வாறான முறையில்  கல்விமான்களை கொண்ட சைவக் குடி  அழித்தாா்கள்.

ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும் கொலை செய்து அரசியலை நாசம் செய்தாா்கள். அன்ரன் பாலசிங்கம். தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி அழிப்பித்தவர். ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்.

 உங்களின் தாய் தந்தையா்களினதும்  உறவினா்களினதும் நண்பா்களினதும்  பலகோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தவா்கள். அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்தவா்கள் இந்த ஈழவிடுதலை இயக்கங்கள் .

கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை  சிங்கள அரசிற்கு எதிராக தோன்றிய அனைத்து ஈழப்போராட்டம் நடாத்தியஇயக்கங்களும்  தமிழ் மக்களை வகை தொகை இன்றி  தமிழின அழிப்பு  செய்தன.

ஆகவே  கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை, தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை,  ஆயுதம் தூக்கியஅனைத்து இயக்கங்களும் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப ஈவுஇரக்கமின்றி சொந்த தமிழ் இளைஞர்களையும் பொதுமக்களையும் கொலை செய்து தமிழினத்தை அழித்தாா்கள். அனைத்து இயக்கங்களும் தமிழின அழிப்பாளா்கள்.

வெட்கம், மானம், சூடு, சொரணை கல்வி அறிவற்ற மூடா் கூட்டங்கள்    தங்களின் சகோதரங்களை,   தங்களின் உறவினா்களை,   தங்களின் நண்பா்களை   கொலை செய்து அழித்தவா்ககளின் வீர மக்கள் தினத்தையும்  மாவீரா் வாரத்தையும்  கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாமல்  மெழுகுதிாி கொழுத்தி கொண்டாடி திாிகின்றாா்கள்.

வெட்கம், மானம், சூடு, சொரணை கல்வி அறிவற்ற மூடா் கூட்டங்கள் உங்களின் சகோதரங்களை,  உங்களின் உறவினா்களை, உங்களின்  நண்பா்களை   பலவிதமான ஸ்ரைல் (style) கொலை செய்து அழித்த இயக்கங்களை தங்களின்  தலைவா்களாக ஏற்றுக் கொண்டு அவா்களுக்கு அடிமை சேவகம் செய்து கொண்டு தங்கள் வாக்குகளை போடுகிறார்கள்.

வெட்கம், மானம், சூடு, சொரணை கல்வி அறிவற்ற மூடா் கூட்டங்களின் மத்தியில் தமிழா்களை கொலை செய்த இயக்கங்கள்  இன்றும் தாங்கள் தமிழ் மக்களை காப்பாற்றும் தலைவர்களாக உருவெடுத்து திரிகிறார்கள்.

இரத்தக்கறை படிந்த கரங்கள் தமிழா்களுக்கு விமோசணம் பெற்றுக் கொடுப்பாா்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் முட்டாள்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.