11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

ஊழியக்காரர்களுடன் பத்மநாதன்.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை. சர்ச்சில் ஆராதனை முடிந்துவிட்டது. பாஸ்டர் பாவமன்னிப்பு கொடுக்க பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டார். வழக்கம்போல பிரச்சாரத்திற்கு செல்ல தயாரானார்கள் ஊழியக்காரர்கள். இந்தவாரம் ஆதனூர் செல்வதென்று முடிவு செய்தனர். ஆதனூரை எப்படியாவது ஆதாம்புரம் என்று மாற்ற வேண்டும். இதுதான் அவர்களின் நீண்டகால ஆசை.

வெள்ளை நிற வண்டியொன்று ஆதனூருக்குள் வந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் பத்துப்பேர். வரும்போதே வண்டிக்குள்ளேயே ஊழியம் செய்திருப்பார்கள் போல, தலைமுடிகள் கலைந்திருந்தது, ஆடைகள்கூட கசங்கி இருந்தது. இறங்கியதும் அவற்றை சரிசெய்தார்கள். தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். பின் மதமாற்ற பிரச்சாரத்திற்காக வீடுவீடாக செல்ல தயாரானார்கள். காலங்கெட்ட கரிக்குருவி பீரங்கி வாசலில் கூடுகட்டுமாம். அதுபோல் அவர்கள் இன்று சென்ற முதலாவது வீடு பத்மநாதனுடையது.
ஆதனூரில் பத்மநாதன் யாரென்று அனைவருக்கும் தெரியும். யாரும் அவருடன் வம்பு தும்புக்குப் போவதில்லை. ரொம்பவும் புத்திசாலி. எதிர்ப்பவர்களை அவர்களின் வழியிலேயே கதறவிடுவது அவரின் வாடிக்கை. பத்மநாதன்வீட்டு வாசலில் நின்று பிச்சைக்காரர்கள் போல் கூப்பிடுகிட்டார்கள் ஊழியக்காரர்கள். கதைவைத் திறந்து எட்டிப் பார்த்த பத்மநாதனால் ஓரளவு ஊகிக்க முடிந்துவிட்டது. "வாங்க வாங்க" என்று வலு பவ்யமாக அழைத்துச் சென்று உள்ளே இருத்தினார்.
"என்ன விசயம், ஏன் வந்திங்க?" என்று எதுவுமே தெரியாததுபோல் கேட்டார் பத்மநாதன். ஊழியக்காரர்களில் ஒருத்தி "நாங்க நல்ல செய்தி ஒன்னு சொல்ல வந்திருக்கம், உண்மையான தேவனைப் பற்றி உங்களுக்கு சொல்லணும்" என்று வாயைக் கோணியவாறு ஆரம்பித்தாள். பத்மநாதனுக்கு புரிந்து விட்டது. வாயின் நெளிப்பே இவள் தினமும் பல பேருடன் ஊழியம் செய்பவள் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டது. பேச்சை இடைமறித்த பத்மநாதன் "என்ன மதமாற்றப் பிரச்சாரமா? அது இங்க வேண்டாமே" என்றார்.
"இல்லை, நீங்க மதம்மாறவேண்டும் என்றில்லை. மனம் மாறவேண்டும் அதுதான் எங்க நோக்கம். அதனால நாங்க சொல்றதை ஒருமுறை முழுசா கேளுங்க" என்றாள் அவள். சைகையால் பொறு என்று கூறிவிட்டு விறுவிறு என்று அறையின் உள்ளே சென்றார் பத்மநாதன். போனவர் போனவேகத்தில் உடனேயே வந்தார். வெளியே வரும்போது அவர் கையில் நான்கைந்து துணித் துண்டுகள் இருந்தது.
ஆம், அது அவருடைய வயதான தந்தையின் கோமணத்துணிகள். அவருடைய தந்தை வயதான நிலையில் அறைக்குள் படுத்த படுக்கையாக உள்ளார். வெளியே கொண்டு வரும்போதே துர்நாற்றம் வீசியது. துவைப்பதற்காக வைத்திருந்த கோமணத் துணிகளையே அவர் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். வந்தவர்களுக்கு ஒன்றும் புரியாமல் பேந்தப்பேந்த முழித்தார்கள்.
வந்திருந்தவர்களை நோக்கிய பத்மநாதன் "உங்க துணிங்கள அவித்துட்டு எல்லாரும் இதை உடுத்திக்குங்க" என்றார் இயல்பாக. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நெளிந்தார்கள். பத்மநாதனோ விடுவதாக இல்லை. "சரிங்க உடுத்தாட்டியும் பரவால்ல, ஒருமுறை மோந்தாச்சு பாருங்க" என்று அவர்கள் முகத்தின் முன்னால் நீட்டினார். முகத்தைச் சுழித்தவாறே அவர்களில் ஒருத்தி "என்ன சார், இப்படி பண்றீங்க என்றாள்".
பத்மநாதன் சிரித்தார். சிரித்து விட்டுச் சொன்னார். "மதம் என்கிறதோ, வழிபாட்டு நம்பிக்கை எங்கிறதோ கோமணம் மாதிரி. அதை உள்ளதான் வச்சுக்கணும். அதை வெளியே கட்டிக்கிட்டு சுத்தக்கூடாது. உங்க கோமணத்திலயே ரொம்ப அசிங்கம் ஒட்டியிருக்கு, பெரிசா ஓட்டைங்கவேற இருக்கு, அதைத் துவைக்கிறத விட்டிட்டு, ஓட்டைய தைக்கிறத விட்டிட்டு அடுத்தவங்கள ஏன் அதை உடுத்திக்க சொல்லி அலையுறிங்க" என்றார்.
அவர்களால் இப்போது எதுவுமே பேசமுடியவில்லை. பத்மநாதன் பேசிய மொழி அவர்களுக்கு இப்போது நன்றாகவே புரிந்திருந்தது.
சர்ச்சில் இருக்கும் சிலைகள் போல, தலையை கீழே தொங்கப் போட்டுக்கொண்டு நடையைக் கட்டினார்கள் ஊழியக்காரர்கள். யாருக்கும் அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் கூட வரவில்லை. ஆதனூர் பத்மநாதன் என்றால் சும்மாவா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.