11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நீய் ஆடிய ஆட்டம் என்ன?

 

ஆடு மாடு கோழி மீன் எலாம் செத்தா அதன் பிணத்தை எவ்வளவு காசு கொடுத்தும் வாங்கி உண்பதற்கு குடிகார ஆட்கள் இருக்கின்றாா்கள். 

ஆனால் நீய் இறந்த பிற்பாடு நீ ஆசையா கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உன்னுடை பிணம் இருக்கும். நீய் அழகு பாா்த்து கட்டிய வீட்டின் Bathroom cleaner கூட வீட்டுக்குள்ள இருக்கும். ஆனால்  உன்னுடைய பிணம் வீட்டுக்கு வெளிய கிடக்கும். நீய் தொட்டு காதலித்து தாளிகட்டிய மனைவியும் உன் பிணத்தை தொட சங்கடபடுவாள்.

1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா ?

3 Star 5 Star 7 Star விதம் விதமான அடையாளங்களை கொண்ட  Hotel களில் விதவிதமான உணவுகள் சாப்பிட்டு வளர்ந்த  உடல் என்று கூறி  வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா?

பெரிய பெரிய பிரபலங்கள் பயன் படுத்திய ஆடை உபகரணங்களை போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு ஆனால் உன் பிணத்தை போட்டி போட்டு வாங்க ஆட்கள் என்றுமே வரமாட்டாா்கள்.  உலக அழகியே ஆனாலும் அந்த உடலைவிட்டு உயிர் போய்விட்டால் அது பிணமென்று தான் கூறுவார்கள்.   இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.