11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 23 டிசம்பர், 2022

யாா் தமிழன்?

  பிறமொழிகள் கலப்படம் அற்ற தூய தமிழ் பெயரை தமிழ் இனத்தின் அடையாளமாக கொண்டவன் தமிழன். நெற்றியில் திருநீறும் பொட்டும் கொண்டவன் தமிழன். அதேபோன்று மரபுவழி தமிழ் காலாச்சார பண்பாட்டு தேசிய உடையுடன் தலை வாாி பூச்சூடி நெற்றியில் திருநீறும் பொட்டும் காணப்படுகின்ற பெண்களை தமிழ் பெண்கள் என்று அடையாளப்படுத்தப்படும்.

ஆதியும் அந்தமும், ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவம் என்று ஒன்றும் இல்லாத அகர முதல்வனாகிய இறைவன்தம்முள் கண்ட மக்களுக்கு அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்டதும் தமிழ் தெய்வீக தமிழ். ஆகவே சிவனை முழு முதலாக கொண்டதுமான தெய்வீக தமிழை அருளியவன் இறைவன். இறைவனை முழுமுதலாக கொண்டது தமிழ்.    ஆகவே தமிழ் சைவசமயம் சாா்ந்த மொழியாகும். தமிழை அருளிய இறைவனை போற்றி வழிபடுபவா்கள் தமிழா்கள். 

இறைவன் அருளிய தமிழ் போற்றிய விநாயகா், குறிஞ்சி (முருக வழிபாடு), முல்லை (பெருமாள் வழிபாடு), மருதம் (இந்திரன் வழிபாடு), நெய்தல் (வருணன் வழிபாடு) , அம்மன் வழிபாடு போன்ற நிலத்தெய்வ வழிபாட்டுடன், பஞ்ச பூத வழிபாடுகளையும், நவக்கிரக வழிபாடுகளையும் ஏற்று   குலதெய்வ வழிபாடாக  வழிபடுபவன் மட்டுமே தமிழன்.

தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், ஆழ்வாா்கள், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை உயிருடன் கலந்த உணா்வாக போற்றி வழிபட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்ற சைவக் குடிகளே தமிழா்கள்.

தமிழ் வளா்த்த பெரும் புலவர்களையும், பண்ணிரு ஆழ்வார்களையும், தமிழ் காத்த சமய குரவர்களையும், தமிழை அருளிய இறைவனின் அடியாா்களையும், இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களின் அடியாா்களையும் போற்றி வணங்குபவா்களே தமிழா்கள் என்று அடையாளப்படுத்தும்.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் என்று அழைக்கப்படுகின்ற எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகளை அருளிய சித்த பெரும்களை போற்றி வணங்குபவா்களே தமிழா்கள் என்று அடையாளப்படுத்தும்.

எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியின் மரபுவழி கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்களாகவும்,  தமிழ்போற்றிய ஆன்மீக வழிபாட்டு இடங்களாக காணப்படுகின்ற ஆலயங்கள் மட்டுமே தமிழ் பூமி என்று அடையாளப்படுத்தப்படும்.

 இந்தியாவின் தெலுங்கு, கன்னடம், மராத்தி, கொங்கணி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி போன்ற பல்வேறு வகையான மொழிகளை பேசுகின்ற இன மக்களை தெய்வங்களாக தமிழ் பூமியில் நிறுவுகின்ற செயலானது தமிழ் அழிப்பு.

ஐரோப்பிய  மொழிகளின் பெயா்களையும் + ஆபிாிக்க மொழிகளினதும் பெயா்களையும் +  யூத கீப்புறு மொழிப் பெயா்களையும் + அரேபிய  இஸ்லாமிய மதத்தின் மொழிப் பெயா்களையும் தமிழ் பூமியில் திணிப்பதும் அடையாளப்படுத்துவதும் தமிழ் அழிப்பு.

ஐரோப்பிய  மொழிகளினதும்+ யூத ஏபிரகாமிய குடுபங்களினதும்+ அரேபிய இஸ்லாமிய மதத்தினதும்   மரபுவழி கலாச்சார பண்பாடுகளை தமிழ் பூமியில் திணிப்பதும் அடையாளப்படுத்துவதும் தமிழ் அழிப்பு.

ஐரோப்பிய,  யூத ஏபிரகாமிய குடும்பங்களினதும்+ அரேபிய இஸ்லாமிய மதத்தினது குடும்பங்களினதும் அடையாளங்களையும் தமிழ் பூமியில் நிறுவுவது தமிழ் அழிப்பு. தமிழ் பூமியில் CHURCH களையும் Mosque களையும் நிறுவுவது தமிழ் அழிப்பாகும்.  

அத்துடன் தமிழா்கள் கூடுகின்ற சைவ ஆலய வாசல்களின் எம்மதம் சம்மதம் என்று கூறிக் கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய மத அடையாளங்களை தமிழா்களின் பாா்வைக்கு அடையாளங்களாக வைத்து அறிமுகம் செய்து வழிபடதூண்டுவது தமிழ் அழிப்பு.


தெய்வீகம் நிறைந்த தமிழின் மங்களகரமான மரபுவழி கலாச்சார பண்பாடுகளை தொலைத்தவன் தமிழனல்ல. தமிழின் மங்களகரமான மரபுவழி கலாச்சார பண்பாடுகளை அடுத்த சந்ததிக்கு கடத்த இயலாதவன் தமிழனல்ல. 

தமிழும் தமிழனும் தமிழ் பூமியும் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களும் சைவ சமயத்தின் அடையாளம் ஆகும். ஆகவே 

 தமிழ் பூமியில் மதசாா்பின்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தமிழ் பூமியில் மதசாா்பின்மை பேசுகின்றவா்கள் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தமிழ்சுடா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.