11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 15 டிசம்பர், 2022

மார்கழி.

 அனைத்து உள்ளங்களுக்கும் தட்சாயணத்தின் மார்கழி திருநாள் வாழ்த்துக்கள்.

விருட்சிக ராசியில் இருந்து சூரியன் தனுசு ராசிக்கு பிரவேசிக்கும் முதல் நாளே மார்கழி மாத முதல் நாள் ஆகும். மார்கழி மாதத்தில் ஒவ்வொரு சூரிய உதயத்தின் போதும் சூரியனோடு சேர்ந்து தனுசு ராசியும் உதயமாகும், அன்றைய நாளின் உதய லக்கினமாக தனுசு ராசியே இருக்கும்.

பன்னிரண்டு ராசிகளுக்கும் ஒவ்வொரு மாதம் உரித்தானதாகும். அதனால் தான் ஒரு வருடத்தில் 12 மாதங்கள் எனும் கணக்கு வருகிறது. பன்னிரண்டு ராசிகளையும் சூரியன் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருஷம் ஆகும். காலமும் கணிதமும் தமிழா்களின் கணக்கு.

தமிழ் மாதங்களில் முக்கியமானதும் மிகவும் உயர்ந்ததும் புணிதமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை(ஆன்மாவை) தெய்வீக நிலையான உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம்.

சிவனுக்கு உகந்த திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும் மார்கழி சிறப்பை காண்பிக்கின்ற திருநாளும் மார்கழியே மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ – என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி – ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானை நினைத்து நோன்பிருந்து, பாமாலைகளால் – திருப்பாவை சூடியது மார்கழி மாதத்தில், மார்கழியின் பெருமையை “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என்ற பாடலில் விளக்குகிறார்.

மார்கழி பீடை மாதமல்ல பீடு அதாவது பெருமை சேர்க்கும் மாதமே மார்கழி இதன் காரணாகவே நான் மார்கழி என்றார் கீதையில் கிருஷ்ணர் மேலும் அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்று சொல்கிறார் மகாபாரத யுத்தம் நடந்ததும் கீதை பிறந்ததும் இம்மாதத்தில்தான் ஆகவே மார்கழி பீடை மாதமல்ல பீடு அதாவது பெருமை சேர்க்கும் மாதமே.

சிவனுக்கு உகந்த திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும் மார்கழி சிறப்பை காண்பிக்கின்ற திருநாளும் மார்கழியே மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ – என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி – ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானை நினைத்து நோன்பிருந்து, பாமாலைகளால் – திருப்பாவை சூடியது மார்கழி மாதத்தில், மார்கழியின் பெருமையை “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என்ற பாடலில் விளக்குகிறார்.

63 நாயன்மார்களில் ஒருவரான வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் இவர்களுடைய குருபூஜையும் மார்கழி மாதத்திலே தான். 12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் குருபூஜை கொண்டாடப்படுவது மார்கழி மாதம்.

அனைத்து உள்ளங்களுக்கும் தட்சாயணத்தின் மார்கழி திருநாள் வாழ்த்துக்கள்.

அன்பேசிவம்.

அன்புடன்,  

அ.அருள்செல்வன், 

அருளகம், 

சிவபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.