11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தமிழர்களை அழிப்பதற்காக கோட்பாடுகளை உருவாக்கிய ராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell )

  ராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 

ராபர்ட் கால்டுவெல் 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். 

அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது. 

பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழகம் வந்து தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.தமிழ் படித்து, தமிழைத் திரித்து சூழ்ச்சி செய்து தமிழர்களைப் தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்தவரே இந்த ராபர்ட் கால்டுவெல். 

 தமிழர் வரலாறு என்ற போர்வையில் சாதிச் சண்டைகளை ஊக்குவிக்கும் விதமாக இவர் எழுதிய பல கருத்துகள் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு இன்றும் தீராத பிரச்னைகளாக நம் முன் தலைவிரித்தாடுகிறது. கமுதி வழக்கில் நாடார்கள் தீண்டத்தகாதவர்கள் என்று வெள்ளையர்கள் தீர்ப்பளித்ததற்கு இவரின் சமூக வரலாற்று ஆய்வே காரணமானது. இதன் விளைவாக தென்தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் நாடார்கள் பெருமளவில் மதம் மாற்றப்பட்டார்கள்.சங்கதமிழாின் சைவநெறி வாழ்வியலை சிதைத்தது மட்டுமன்றி தமிழாின் இன்றைய இழிவுநிலைக்கு வித்திட்டவா் ராபர்ட் கால்டுவெல்  .

தமிழர்களின் அடையா சிறப்பை அழித்து தமிழினத்தை அழிப்பதற்காக சங்க இலக்கியங்களில் எந்தவொரு இடத்திலும் தமிழரை திராவிடம் என்று அழைக்காத  திராவிட கோட்பாட்டை உருவாக்கி திணித்தாா்.

சாதியம் அற்ற சமத்துவமான வாழ்வியல் நெறிகளை கொண்ட  தமிழர்களின் ஆலயங்கள் பல்வேறு வகையான தொழில்களை மேற்கொண்டு வந்த மக்களை தொழில்களை சாதிகளாக நெறிப்படுத்தி சாதியத்தை உருவாக்கினாா்.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_28.html

எம்மதம் சம்மதம் என்ற  மதசாா்பின்மை கோட்பாட்டை நிறுவி தமிழர்களை மதசாா்பின்மை பேசவைத்து அதன் ஊடாக கிறிஸ்தவத்தை நிறுவியவர் ராபர்ட் கால்டுவெல்(Biography of Robert Caldwell ) .

ராபர்ட் கால்டுவெல்லின் மதசாா்பின்மை கோட்பாட்டை எந்தவொரு கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் ஏற்றுக் கொண்டு எம்மதம் சம்மதம் என்று கூவியது இல்லை. ஆனால் கல்வி அறிவு அற்ற தமிழ் மூடர்களே எம்மதம் சம்மதம் என்று கூறிக் கொண்டு இஸ்லாமியனையும் கிறிஸ்தவனையும் வளர்த்துக் கொண்டு தன் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு தானும் அழிந்து கொண்டு இருக்கின்றான்.

தமிழர்களை ஓம் என்று பேசாமல் தடுப்பதற்காக ஆமாங்க என்று பேசவைத்தவன். அத்துடன் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசி தமிழின் சிறப்பையும் அழித்த தமிழின அழிப்பாளன்.

ராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell ) இன்  கோட்பாடுகளே இன்று தமிழின அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றது. ராபர்ட் கால்டுவெல் கோட்பாடுகளை காவிதரிகின்றவர்களே இன்றைய தமிழின அழிப்பாளர்கள்.

ராபர்ட் கால்டுவெல் (Biography of Robert Caldwell ) . வாரிசுகளாக கிறிஸ்தவ மதபோதகர்களும் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்ற தெழுங்கரும் ஆகும்.

அருளகம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.