11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

கிறிஸ்தவ இலங்கை அரசு இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்கள் என்பதை உறுத்திபடுத்திய ஆதாரம்.

1956 ம் ஆண்டில் "விஜயனின் வருகை"என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டு,பிறகு வாபஸ் பெற்றுக் கொண்ட தபால் தலை. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும்,கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபா் தலை அமைந்திருந்தது.தபால் தலையைப் பார்த்த கிறிஸ்தவ மதவெறி கொண்ட சிங்கள தலைவர்கள்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கதக்கது அல்ல.தவிரவும் விஜயன் வந்த போதே இங்கு குவேனி என்ற தமிழ் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின்  பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும்.எனவே,இந்த தபால் தலையை வாபஸ பெற வேண்டும் என்று கூறினார்கள்.

கிறிஸ்தவ மதவெறி எதிர்ப்புக்களை அடுத்து கிறிஸ்தவ மதவெறி இலங்கை அரசானது விஜயனின் வருகை பற்றிய தபால் தலையை வாபஸ் பெற்றுக் கொண்டது. என்னதான், கிறிஸ்தவ மதவெறி இலங்கை அரசு வாபஸ பெற்றுக் கொண்டாலும், இலங்கை அரசே வெளியிட்ட தபால் தலை என்பதால் இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்கள்தான் என்பதை 1956-ல் ஆட்சி புரிந்த இலங்கை அரசே வெளிப்படையாக அறிவித்து விட்டதென்பதை மறைக்கவோ மறக்கவோ முடியாது.

ஆக்கம்  அருளகம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.