11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

இலங்கையில் தமிழா்களை நிராகாித்து இலங்கை பெளத்த நாடு. இலங்கை மக்கள் அனைவரும் சிங்களவா்கள் என்று கத்தோலிக்க மதம் பிரகடணம்.


இலங்கை பெளத்த நாடு என்றும் இலங்கை மக்கள் அனைவரும் சிங்களவா்கள்   என்று  தமிழா்களை நிராகாித்து கொழும்பு பேராயர் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவா்கள் பிரகடணம் செய்தாா். 

 பெளத்த போினவாதம் என்று கூறி போராட்டங்கள் செய்பவா்கள் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவா்களின்  இலங்கை பெளத்த நாடு.  இலங்கை மக்கள் அனைவரும் சிங்களவா்கள் என்ற கோட்பாட்டிற்கு  எதிராக கூற்றிக்கு எதிராக  தமிழ் மீட்பு போராட்டங்கள் செய்வதற்கு  மறுப்பது ஏன்?

ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவா்கள் “  2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்கால் இறுதி கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவரும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சோ்ந்த பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் அல்ல ஆகவே சா்வதேச விசாரனையோ உள்ளக விசாரனையோ அவசியம் அற்றது" என்று கருத்தை கூறியவா். 

  ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவா்கள் "உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி சா்வதேச நீதிமன்றத்தை நாடுவோம்". என்று கருத்தை வெளியிட்டு வருகின்றாா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.