11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 30 செப்டம்பர், 2021

திருச்சிற்றம்பலம் திருநீற்றின் மகிமை .

 நீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட தமிழ் கலாச்சார பண்புகள் அல்லது நாற்குணங்கள்  ஆண், பெண் இருபாலாருக்கும், அவரவர் இயல்புகளுக்கு ஏற்றவாறு இயற்பண்புகளாய் அமைந்திருக்கும். 

தலைவாாி பூ சூடாமல் திருநீறு ஆகிய விபூதியை அணிந்து கொள்ளாத நெற்றியுடன் தலைவிாி கோலமாக திாிகின்ற பெண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என நான்கு வகையான நற்பண்புகள் அற்றவா்களாகவே காணப்படுவாா்.  அத்துடன்  அவா்களின் நெற்றியில்பேய்கள் குடிகொள்ளுகின்றன. 
தலைவாாி பூச்சூடி நெற்றியில்  திருநீறும் திலகமும் இன்றி இருக்கும் பெண்களை தாித்திரம் பிடித்த பேய்கோலம்  என்று எமது முன்னோா்கள் அடையாளப்படுத்தினாா்கள்.

திருநீறு ஆகிய விபூதியை அணிந்து கொள்ளாத நெற்றியுடன் வாழுகின்ற ஆண்கள் நற்பண்புகள் நல்லொழுக்கம் கண்ணிய மற்றவா்களாகவும்  பஞ்சமா பாதகச் செயல்களை செய்பவர்களாகவும்  காணப்படுவாா்கள். 

ஆகவே ஆண்காயின் நெற்றியில் திரு நீறும் பெண்களாயின் தலைவாாி பூ சூடி நெற்றியில் விபூதியை அணிந்து திலகம் இட்டு இருத்தல் வேண்டும் என்று தமிழாின் வாழ்வியல் நெறிகள் எடுத்துக் கூறுகின்றன.தமிழாின் வாழ்வியல் நெறிகளை கொண்டதே தமிழ்தேசியம் ஆகும்.

திருநீற்றின் பெருமை.

திருநீறானது அச்சம் நீக்கி, வேண்டிய நற்பயனைத் தருவதும் அழகினைத் தந்து பொலியும்.  உலக வாழ்க்கையில்  ஏற்படும் பிணிகளையும், மனதால் ஏற்படும் துயரங்களையும், தீர்ப்பதும்   நல்லறிவு தருவதும், அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும்.  அதுவே  ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

திருநீறு, முக்தி இன்பத்தை தருவது. முனிவர் பெருமக்கள் அணியும் பெருமை உடையது. எக்காலத்திலும்மேலானதாக விளங்கி நலம் தருவது. திருநீற்றின் மகிமை அறிந்து, சிவனடியார்கள் போற்றுகின்றனர்.திருநீறானது மன்னுயிர்களுக்கு, சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். எட்டு வகையான சித்திகளைத் தரவல்லது.  அதுவே ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள் இனிமைக் கொள்வார்கள். அத்தகைய திருநீற்றை விரும்பி அணிபவர்களுக்கு பெருமை கொடுக்கும். வல்லமை தரும். இறப்பினைத் தடுக்கும். நல்லறிவைத் தரவல்லது திருநீறு. மன்னுயிர்களுக்கு உயர்வைத் தரும் ஆற்றல் உடையது இத்திருநீறு. இதுவே ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

திருநீறு மெய்யில் பூசி அணிய, இனிமை சேர்க்கும். புண்ணியம் சேர்க்கும். திருநீற்றின் பெருமை பேச இனியது. உலக பந்தத்தால் உண்டாகும் ஆசைகளை நீக்கி, உயர்ந்த நிலைக்கு செல்ல வழி வகுக்கும். எல்லாவற்றிர்க்கும் அந்தமாகத் திகழ்வது திருநீறு. தேசமெல்லாம் புகழ்ந்து போற்றும் சிறப்புடைய இத்திருநீறு, இதுவே ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

பொன்போன்ற பெரிய செல்வமாக விளங்குவது திருநீறு, அவலமாகும் துன்பத்தைப் போக்குவதும், மனத்தில் வருத்திக் கொண்டிருந்து துன்புறுத்தும் நெஞ்சக் கனலைத் தணித்து விளக்குவதும், சிறப்பினை அளிப்பதும், எல்லாநிலைகளிலும் பொருந்தி விளங்கிச் சிறப்பு தருவதும் திருநீறு. புண்ணியத் தன்மை கொண்டதுடன், புண்ணியம் செய்த பெருமக்கள் விரும்பி பூசி, மேலும் பொலிவு கொள்வதற்கும் காரணமாவது திருநீறு. செல்வம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனார்க்கு உரிய திருநீறு, இத்தகைய சிறப்பினை உடையதாகும். 

முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியது திருநீறு. இம்மை, மறுமை, ஆகிய இரண்டினுக்கும் உயிர்களுக்குத் துணையாக இருப்பது திருநீறு. நித்தியமாயும், உயர்ந்த பொருளாயும் பயின்று , நுகரும் பொருளாக உடையது நீறு. அது பாக்கியமாக இருந்து விளங்கும் சிறப்புடையது. மாயையின் வயப்பட்டும் சோர்வுற்றும் தடைப்படுத்தும் உறக்க உணர்வினைத் தடுத்து புத்துணர்ச்சி தந்து தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அத்தகைய திருநீறு, கூர்மையான சூலப் படையுடைய திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

இராவணன் திருநீறு அணியப் பெருமையுறச் செய்தது. எண்ணத்தால் தகுதியாக்கிப் போற்றி வழி படுவதற்கு உரியது திருநீறு. பராபரனைப் போன்று துதிக்கப் படும் பொருளாக விளங்குவதும், பாவத்தைப் போக்குவதும் திருநீறு.தராவனமாக இருப்பது திருநீறு. அது தத்துவமாகவும் விளங்கி நிற்பது. அத்தகையது, அரவம் அணைந்து விளங்கும்திருமேனியராகிய திரு ஆலவாய் அண்ணலுக்கு உரியதாகிய திருநீறு ஆகும்.

திருமாலும், பிரம்மனும் அறிவதற்கு அரியதாகிய வண்ணத்தை உடையது திருநீறு. தேவர்கள் தமது மெய்யில் பூசிமகிழ்வது திருநீறு. பிணிகளை நீக்கி இன்பத்தை தரவல்லது திருநீறு. அத்தகைய சிறப்புடையது, நஞ்சினை உண்டமிடற்றுடைய ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

சமணர்களும், சாக்கியர்களும் திகைக்கும் தகைமையில் காட்சி தருவது திருநீறு. திருநீற்றை நெஞ்சில் பதித்த போதும் இனிமையைத் தரவல்ல அத்தகைய தெய்வீகம் உடையது. எண் திசையில் உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சரணடைந்த பெருமக்களும் ஏத்தும் சிறப்புடையது திருநீறு. அத்தகையது, தேவர்கள் பணிந்து ஏத்தும் திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

வலிமை மிக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற ஆலவாய் அண்ணலாரின் திருநீற்றைப் போற்றித் துதித்தஞானசம்பந்தர், மன்னவனாகிய கூன் பாண்டியனுடைய தீமையான பிணி யாவும் தீரும் வகையில் தேற்றிச் சாற்றிய இத் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வார்கள்.

 திருநீற்றின் பெருமையை நிராகாித்து ஒரு கையில் கறுப்பு மட்டை புத்தகமான பைபிளையும் மறுகையில் சிவப்பு மட்டையான கம்யூனீசம் சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம்  போன்ற இலவச புத்தகங்களைகாவிக் கொண்டும்  தலையில் குரானையும் சுமந்து கொண்டும்  எம்மதம் சம்மதம் என்று கூறிக் கொண்டு தமிழின் வாழ்வியல் நெறிகள் அனைத்தையும் நிராகாித்து சைவ ஆலயவாசல்களில் படுகொலைகளை நடாத்திய தமிழீழ போராட்டம்  மாண்டு கொண்டது.

திருநீறு தமிழா்களின் அடையாளங்களில் ஒன்று அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளம். திருநீற்றை நிராகாிப்பவா்கள் தமிழின அழிப்பாளா்களாகும். 

திருநீற்றின் பெருமை  தயாிப்பு உலக சைவபேரவை அருளகம் சிவபுரம்.  திருச்சிற்றம்பலம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.